Thursday, November 7, 2013

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று



எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ...
ஏதோ ....அது ஏதோ ...
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது ...
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன் ...(எந்த )

கூந்தல் முடிகள் ... நெற்றி பரப்பில்
கோலம் போடுதே ...அதுவா (2)
சிரிக்கும் போது ...கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே ...அதுவா (2)
மூக்கின் மேலே மூக்குத்தி போலே
மச்சம் உள்ளதே ...
அதுவா ...அதுவா ...அதுவா ...
கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு
மிச்சம் உள்ளதே ...
அதுவா ...அதுவா ...அதுவா ...
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன் ..

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ...
ஏதோ ....அது ஏதோ ...
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது ...

முல்லை நிறத்தில் ...பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே ...அதுவா ...(2)
சங்கு கழுத்தை ...பாசி மணிகள்
தடவுகின்றதே ...அதுவா (2)
ஒவ்வொரு வாக்கியம் முடியும்போதும்
புன்னகை செய்வாய் ...
அதுவா ...அதுவா ...அதுவா ...
ஓரிரு வார்த்தை தப்பாய் போனால்
உதடு கடிப்பாய் ...
அதுவா ...அதுவா ...அதுவா ...
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன் ..

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ...
ஏதோ ....அது ஏதோ ...
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது ...
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன் ...

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ...
ஏதோ ....அது ஏதோ ...
அடி ஏதோ உன்னிடம் ....
இருக்கிறது ....

Tuesday, September 24, 2013

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - தங்கமீன்கள்




ஆனந்த யாழை மீட்டுகிறாய் 
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் 
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் 
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய் 

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை 
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் 
மலையின் அழகோ தாங்கவில்லை 
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி 
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி 
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி.

ஆனந்த யாழை மீட்டுகிறாய் 
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் 
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் 
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்

தூரத்து மரங்கள் பார்க்குதடி 
தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி 
காற்றினில் வாசம் தூக்குதடி 
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு 
உனது புன்னகை போதுமடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய் 
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் 

உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பாக்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேக்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி 
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் 

Sunday, September 22, 2013






காதல் என்னுள்ளே வந்த நீரம் அறியாமல் 
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில் 
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில் 
சாலை அத்தனை அழகாய் மாறும் 

என் வீட்டைத் திடலாக்கி விளையாடும் பறவைப் போல் 
மனதினில் உள்ளே வந்தாடுவதாரோ 
என் சுவாச அரியாகி எனைத் தாங்கும் உடலாகி 
உயிர் வாழ கூட்டிச் செல்வது யாரோ 

காதல் ...

அர்த்தம் இல்லா வீணான வார்த்தைகளை 
நான் பேசும் வேளையிலும் ரசிப்பாய் 
அளவில்லா காதலையும் எந்த சூழலிலும் 
நான் கேட்கும் முன்னே தருவாய் 

உன் முக தசைகளில் எங்கே வெட்கம் உள்ளதென்று 
நீ பேசும் நேரம் எல்லாம் நானும் தேடித் பார்ப்பேன் 
குளிர் காய்ச்சல் ஏதும் வந்தால் 
உன்னுள்ளே நானும் வந்தால் 
மெதுவாய் சரியாய் அது போகாதா

காதல் ...

வாழ்வினிலே உன் மூச்சு தூரத்திலே 
உன்னோடு இல்லை என்றால் தவிப்பேன் 
வாழும் நாட்களும் ஆயுள் முழுதிலும் 
உன் வாசத்திலே பிழைப்பேன் 

என் பலம் பலவீனம் எல்லாமும் தெரிந்தாலும் 
உன் அன்பு வந்த பின்னே நாளும் மாறிப் போகும் 
என் குணம் குனவீனம் உன்னோடு சேர்ந்து விட்டால் 
நலமாய் நலமாய் அது மாறாதா 

காதல் ...

என் வீட்டை ...

காற்று வீசும் உன் வாசம்





காற்று வீசும் உன் வாசம் 
காய்ச்சல் வந்தது ஏனோ 
வாசம் எங்கெங்கும் ஈரம் 
சாரல் வந்தது ஏனோ 

நீ என் நெஞ்சில் பெய்யும் மழைப் போல மாயமோ 
நான் மிதக்கிறேன் பறக்கிறேன் சிரிக்கிறேன் அன்பே

காற்று வீசும் ..

நீ நடந்து செல்லும் பாதையில் 
என் கண்கள் என்னை விட்டு உன்னைச் சுற்றுதே
நீ பேசும் அழகைக் கேட்கையில் 
கொஞ்சிப் பேசும் மழலை அழகும் தோற்றுப் போகுதே

எங்கேயும் நீ அடி போகுதே உயிரடி 
வாழ்கிறேன் சாகிறேன் இதென்ன மாயமோ 

காற்று வீசும் ..

நீ என் நெஞ்சில் பெய்யும் மழைப் போல மாயமோ 
நான் மிதக்கிறேன் பறக்கிறேன் சிரிக்கிறேன் அன்பே

Thursday, August 15, 2013

நீயின்றி நானும் இல்லை



நீயின்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்

தொடு வானம் சிவந்து போகும்
தொலை தூரம் தொலைந்து போகும்
கரைகின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே
இனி உன்னை பிரிய மாட்டேன்
துளி தூரம் நகர மாட்டேன்
முகம் பார்க்க தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் இமை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனை தேடி
ஓ.... ,,,,,,,,,

நீயின்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உனை காணும் நேரம் வருமா..வருமா
என் கண்கள் மோட்சம் பெறுமா

விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
தினம் நானும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க
எனை வந்து உரசும் காற்றே
அலையோடு கரைந்து நேற்றே
கை கோர்த்து நெருங்கினேன்
கண் அடித்து நீ ஏங்க
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் இமை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனை தேடி
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் இமை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனை தேடி
லாயி லாயி லாயி,,, ,,,,,

Friday, August 2, 2013

விழி மூடி யோசித்தால்..

விழி மூடி யோசித்தால்.. 
அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் 
தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் 
ஏன் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே 
உங்கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே 
நான் என்னை கண்டேனே செந்தேனே
(விழி மூடி..)

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் 
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் 
மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் 
உன்ந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுரிங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே..
விண்ணோடும் முகிலோடும் விழையாடி திரிந்திடுமே.
(விழி மூடி..)

ஆசை என்னும் தூண்டில் 
முள்ளால்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்..
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் எதோ புது-மயக்கம்..
இது மாயவலையல்லவா புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும்
விழி மூடி யோசித்தால்..

துளி துளி துளி மழையாய் வந்தாளே

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்

பேரை கேட்க தோன்றும்
பூபோல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்....

செல் செல் அவளுடன் செல் என்றே
கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொள்ளுதடா...

அழகாய் மனதை பறித்து விட்டாளே..
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...

தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள்தான் போதுமோ!
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை
கேட்டுத்தான் பூக்களும் பூக்குமோ!
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்,
பார்வை ஆளை தூக்கும்...
கன்னம் பார்த்தால் முத்தங்களால்
தீண்ட தோன்றும்...
பாதம் ரெண்டும் பார்க்கும்போது
கொலுசாய் மாறதோன்றும்...

அழகாய் மனதை பறித்து விட்டாளே....
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொள்ளுதடா...

சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன்
தோள்களில் சாயுவேன்..
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிபோய் ஏந்துவேன்,

நெஞ்சிலே தாங்குவேன்,
காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள்,
காயமின்றி வெட்டி போட்டாள்..
உயிரை ஏதோ செய்தாள்...
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டு கேட்டாள்...
கனவில் கூச்சல் போட்டாள்...

அழகாய் மனதை பறித்து விட்டாளே...

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொள்ளுதடா...

துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே....

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே


யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே 
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே 
என்னை பார்க்கிறாள் ஏதோ
கேட்கிறாள் எங்கும் இருகிறாலோ 
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால்
நடக்கிறாள் நெஞ்சை கிழிகிறாலோ 
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தால் 
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தால் 
என்னை ஏதோ செய்தால் ...

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே 
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே 



என் வீடு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள் 
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன் 
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில் 
அதிகாலை சூரியனை பார்த்தேன் 
கண்ணாடி வளையலை போலே 
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன் 
கால்தீண்டும் கொழுசில் என்னோட மனச 
சேர்த்து கொர்கவே தவிப்பேன் 
காதோடு தவழும் கம்மல் போல்கிடப்பேன் 
கன்னத்தை உறசி என் ஜென்மம் முடிப்பேன் 
என்னை ஏதோ செய்தால் ...

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே 
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ...


நான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயோ பார்ப்பாள் 
பார்காத நேரம் என்னை பார்ப்பாள் 
என்னை பார்த்து சிரிப்பால்
நான் பார்த்தல் மறைப்பால் 
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பால் 
பெண் நெஞ்சம் புதி அதை எப்போதும் 
யாரும் யாரும் அறிந்ததே இல்லை 
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும் 
பெண்கள் மதிபதே இல்லை 
மனம் நொந்த பிறகே
முதல் வார்த்தை சொல்வாள் 
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள் 
என்னை ஏதோ செய்தால் ...

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலி 
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது


பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே

யானைத் தந்தத்தின் சிலை நீயே – தினம்
ஏற்றும்
 தங்கத்தின் விலை நீயே
காதல் வீசிய வலை நீயே
என்னைக் கட்டி இழுத்தாயே
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே
எதைத்த தருவது தானென்று

எதைப் பெறுவது தானென்று
குறுக்கும் நெடுக்கும் குழந்தை போல
இதயம் குதித்தோட
தலையசைக்குது உன் கண்கள்
தவிதவிக்குது என்நெஞ்சம்
ஒரு தீ போல ஒருத்தி வந்து
உயிரைப் பந்தாட
ஞாபகம் உன் ஞாபகம்
அது முடியாத முதலாக
பூமுகம் உன் பூமுகம்
அது முடியாத முதல் பாகம்
இவள்தானே உன் இதழால் படிப்பாயோ
கண்ணிமையால் எனை
மூடி காதல் திறப்பாயோ
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே

அலைவரிசையில் நீ சிரிக்க
தொலைத்தொடர்பினில் நான் இருக்க
உதடும் உதடும் பேசும் போது
உலகை மறந்தேனே
உனதருகினில் நானிருக்க
உயிர்க் கொழுந்தினில் பூ முளைக்க
இரண்டாம் முறையாய்
இதயம் துடிக்கப் புதிதாய்ப் பிறந்தேனே
மாலையில் மாலையில்
உன் மடி மீது விழுவேனே
மார்பினில் உன் மார்பினில்
நான் மருதாணி மழை தானே
வெண்ணிலவோ நெடுந்தூரம்
பெண்ணிலவோ தொடுந்தூரம்
உன்மழையில் நனைந்தாலே
காய்ச்சல் பறந்தோடும்
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே

யானைத் தந்தத்தின் சிலை நீயே – தினம்
ஏற்றும்
 தங்கத்தின் விலை நீயே
காதல் வீசிய வலை நீயே
என்னைக் கட்டி இழுத்தாயே.....


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலை வானம் வேலை காட்டுதோ 
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ 


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலை வானம் வேலை காட்டுதோ 
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ 

நிலவில் ,என் நிலவில் ஒரு மின்சாரம் தான் தூவுதோ 
கனாவில் , என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பதிகையில் 

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலை வானம் வேலை காட்டுதோ 
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ 

ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும் மொழியில் எதுவும் கவிதையடி 
அசையும் எதுவும் இசையில் எதுவும் இனிமையடி 


வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவம் 
இதயபுதரில் சிதறி சிதறி வழிவது ஏன் 
உதிரும் துளியில் உதிரம் முழுதும் உதிர்வது ஏன் 
உருகாதே உயிரே விலகாதே மனதே 


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலை வானம் வேலை காட்டுதோ 
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ 

பசை ஊரும் இதழ் , பசி ஏறும் விரலும் 

உயிரின் இடையில் மயிரின் இழையும் தூரமது 

ஒரு வெள்ளை திரையை உன் இதயம் திறந்தாய் 
சிறுக சிறுக இறகை திருடும் தாரிகையே 

விடியும் வரையில் எழுதும் எதுவும் தூரிகையே 
விடியாதே இரவே முடியாதே கனவே 
நீ இன்னும் கொஞ்சம் நீள கூறி காதல் துடிக்க துடிக்க


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலை வானம் வேலை காட்டுதோ 
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ 


நிலவில் ,என் நிலவில் ஒரு மின்சாரம் தான் தூவுதோ 
கனாவில் , என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பதிகையில்

முன்தினம் பார்த்தேனே

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் பொன்னானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ
நாட்கலூம் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென
(முன்தினம்..)

துலாம் தொட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாம் பாரம் தோற்காதோ பேரழகே

முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அழைக்காமல் போவேனோ வா உயிரே
ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு
விடை சொல்லடி
(முந்தினம்..)

கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மாறுதோ நேரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரொன்று உரைய கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்க்காலமே
(முன்தினம்..)

Monday, July 29, 2013

முழு மதி அவளது முகமாகும்


முழு மதி

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்

மார்கழி மாதத்தின் பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடுயென வரம் கேட்டேன்
அது கொடுத்தால் உடனே எடுத்தே சென்றுவிட்டால்

ஒ ..ஹூ முழுமதி அவளது முக்ஹமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்தின் பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

கால்தடமே பதிக்காத
கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத
மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மோனத்தில் நின்றேன்

ஒரு கரையாக அவளிருக்க .. மறுகரையாக நான் இறுக்க
இடையில் தனிமை தளம்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க
கைகள் நினைத்தால் முடிந்திடுமா?
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே ..

ஹோ ..ஊ முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்தின் பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அமையிதியுடன் அவள் வந்தால்
விரல்களை நான் பிடுத்து கொண்டேன்
பல வானவில் பார்த்தேன் வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தேன் தலைகோத
மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிபிடம்

அருகில் இருந்தாளொரு நிபிடம்
தொலைவில் தெரிந்தால் மறு நிபிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாய்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே
திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகம் மூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா?

ஒ ..ஹூ முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்தின் பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும் ...

Thursday, July 25, 2013

ரகசியமானது காதல்



ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
ஸ்வரசியமானது காதல்
மிக மிக ஸ்வரசியமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மரபானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை,வெளிச்சத்தை போல
அது சுதந்தரமானது அல்ல
ஈரத்தை இருட்டினை போல
அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிரானது
கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல
விரல் தோடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல

Wednesday, July 10, 2013

வா வா என் தேவதையே



வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…

செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கயிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
மிசையில்லாத மகள் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்!

Thursday, June 13, 2013

இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்தி பூவில்


படம்: நீதிக்கு தலை வணங்கு 
குரல்: யேசுதாஸ் / வரலக்ஷ்மி

இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்தி பூவில் 
தொட்டிலை கட்டி வைத்தேன் 
அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை 
மெலென்ன இட்டு வைத்தேன் 

இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்தி பூவில் 
தொட்டிலை கட்டி வைத்தேன் 
அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை 
மெலென்ன இட்டு வைத்தேன் 
நான் ஆராரோ என்று தாலாட்ட 
இன்னும் யார்ராரோ வந்து பாராட்ட 

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் 
மண்ணில் பிறக்கையிலே 
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் 
மண்ணில் பிறக்கையிலே 
பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்பதிலே 
அன்னை வளர்பதிலே 
நான் ஆராரோ என்று தாலாட்ட 
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட 

இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்தி பூவில்

தூக்க மருந்தினை போன்றவை பெற்றவர் 
போற்றும் புகழ் உரைகள் 
நோய் தீர்க்கும் மருந்தினை போன்றவை கற்றவர் 
கூறும் அறிவுரைகள் 
கூறும் அறிவுரைகள் 

இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்தி பூவில் 

ஆறு கரையில் அடங்கி நடந்திடில் 
காடு வளம் பெறலாம் 
ஆறு கரையில் அடங்கி நடந்திடில் 
காடு வளம் பெறலாம் 
தினம் நல்ல நெறி கண்டு பிள்ளை வளர்ந்திடில் 
நாடும் நலம் பெறலாம் 
நாடும் நலம் பெறலாம் 

நான் ஆராரோ என்று தாலாட்ட 
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட 

பாதை தவறிய கால்கள் விரும்பிய 
ஊர் சென்று சேர்வதில்லை 
பாதை தவறிய கால்கள் விரும்பிய 
ஊர் சென்று சேர்வதில்லை 
நல்ல பண்பு தவறிய பிள்ளையை பெற்றவள் பேர் சொல்லி வாழ்வதில்லை 
பேர் சொல்லி வாழ்வதில்லை 

இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்தி பூவில்